குவைத்தில்பொள்ளாச்சியில் பாலியல் விவகாரத்தில் சுமார் 225 சகோதரிகளை சீரழித்த மனித மிருகங்களை தூக்கில் ஏற்றிடவும், காட்டுமிராண்டிகளை ஜாமினில் வெளியிடாமல்வழக்கை விரைந்து நடத்திடவும், பொள்ளாச்சி விவகாரத்தை உலக்குக்கு வெளிபடுத்திய நக்கீரன் வார இதழ் ஆசிரியர் நக்கீரன் ஆசிரியர் மீது வழக்கு தொடர நினைக்கும் அரசை கண்டித்தும்15.03.2019 அன்று வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு குவைத் முர்காப் சிட்டியில் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

pollachi - Kuwait

நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், மனித மிருகங்களை உலகுக்கு தெரிவித்த நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டுகள் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்ததுடன், உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் ஆசிரியர் மீது வழக்கு தொடர நினைக்கும் அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறினர்.

ஆர்.கே. பிரகாஷ், சதீஷ், நெல்லைமரைக்காயர், அலி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடந்த இந்த கண்டன போராட்டத்தில், குற்றவாளிகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.