Skip to main content

பொள்ளாச்சியைப் போல பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிப்பு: போலீசில் வழக்கறிஞர் புகார்

Published on 22/04/2019 | Edited on 22/04/2019


பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வண்புனர்வை போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
 

பெரம்பலூரைச் சேர்ந்தவர் ப.அருள். வழக்கறிஞரான இவர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். 

 

arul

                                                                                             அருள்


அதில் அவர், பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வண்புனர்வை போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதில் பெரம்பலூர் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரும், பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் ஒரு போலி நிருபரும் மற்றும் இன்னும் சிலரும் குழுவாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 

இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி காம இச்சைக்கு இணங்க வைத்து அதனை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வருவது, மறுக்கும் பெண்களை வீடியோக்களை வெளியே விடுவோம் என்று மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
 

இவர்களுடைய மிரட்டலுக்கு பயந்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்து வருகின்றனர். மேற்படி சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதி உள்பட பல இடங்களில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. 
 

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலும், மேற்கண்ட பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டலில் ஈடுபட்ட மேற்கண்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பை கருதி காவல்துறை கண்காணிப்பாளர் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.






 

Perambalur


வழக்கறிஞர் அருள் பெரம்பலூர் எஸ்.பி திஷா மித்தலிடம் கொடுத்த புகார் மனு ஏற்கப்பட்டு மாவட்ட எஸ்.பி-யின் பரிந்துரையின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.