இந்திய தேசிய மக்களுக்கு அதிர்ச்சியும் தமிழ்நாட்டு மக்களுக்கு தலைகுனிவும் ஏற்படுத்திய பொள்ளாச்சி வன்கொடுமையாளர்களை பாதுகாக்கும் நோக்கோடும் நீதிகேட்டு தன் எழுச்சியோடு போராடும் தமிழக மாணவிகள், மாணவர்கள், பொது மக்களை அச்சுறுத்தும் நோக்கோடும் தி.மு.க. தலைவர் குடும்பத்தினர் மீதும், தமிழில் வெளிவரும், சமூக அரசியல் விழிப்புணர்வு வார இதழ் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள தமிழக அரசை கண்டித்து செந்துறை அண்ணாசிலை முன்பு இன்று (15-3-2019) வெள்ளி காலை 10.00 மணிக்கு அனைத்து கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

pollachi issue protest

pollachi issue protest

pollachi issue protest

ஆர்ப்பாட்டத்தில், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச. அ. பெருநற்க்கிள்ளி முன்னினிலை வகித்தார். தி.க. மாவட்டச் செயலாளர் விடுதலை. நீலமேகம், தெற்கு ஒன்றியச் செயலாளர் பூ. செல்வராசு, மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், மாவட்ட பொரியளர் அணி துணை அமைப்பாளர் சிவ. பாஸ்கர், மு. சித்ரா, சுமதி கருணாநிதி, ஜெயசுதா கருணாநிதி, சபாபதி, தேன்துளி, கோபி, நல்லுசாமி, கோவிந்தராசு, நல்லப்பன், கோடி,புலேந்திரன், தமிழ்மாறன், ராஜவேல், காமராஜ், இலங்கைச்சேரி பாலு, தமிழ்ச்செல்வன், துளார் ஜெய்க்குமார், புகழேந்தி, வி.சி.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வநம்பி, கருப்புசாமி, மருவத்தூர் வெற்றி, செல்வகுமார், செ. க. ராஜேந்திரன், பாலமுருகன், காங்கிரஸ் ஒன்றியத் தலைவர்கள் செந்தில், பழனிச்சாமி, சிராஜேநிரன், ஏ. சந்திரசேகரன், பெரியசாமி ஆசிரியர், எம். கண்ணன், பி. ரெங்கநாதன், காமராஜ், பிச்சப்பிள்ளை, பழனிவேல், பெரியாசாமி, திக மண்டலச்செயலாளர் மணிவண்ணன், செந்தில், ஒன்றிய பொருப்பாளர்கள் சங்கர், மதியழகன், சேகர், முத்தமிழ்ச்செல்வன், ரத்தின. ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment