Skip to main content

பொள்ளாச்சி விவகாரம்;போராட்டத்தில் மாணவரை அறைந்ததை பெரிதுபடுத்த வேண்டாம்;எஸ்பி கோரிக்கையால் போராட்டம் தற்காலிக வாபஸ்

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் போலீசாரைக் கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தினரை பழைய பேருந்து நிலையத்தில் போலிசார் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

 

pollachi issue; college student protest

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமையன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த மாவட்ட எஸ்.பி செல்வராஜ் மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமியை கன்னத்தில் அறைந்து தள்ளினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து வேனில் போலீசார் ஏற்றினார்கள்.

 

 

இதனால் போராட்டத்தில் இருந்த மாணவிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து  கைது செய்தவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்து சாலையில் அமர்ந்தனர். அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் இறக்கி விடப்பட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்ட மாணவிகளை பெண் போலிசார் இல்லாமல் ஆண் போலிசாரே மாணவிகளை தள்ளிவிட்டனர். மேலும் சில சீருடை இல்லாமல் நின்ற போலிசார் மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் மாணவிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள். 

 

pollachi issue; college student protest

இந்த நிலையில் காயமடைந்த அரவிந்தசாமி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அரவிந்தசாமியை மருத்தவமனையில் இருந்து வெளியேற்றும் முயற்சியை எடுத்ததால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட எந்த பதிவுகளையும் இல்லை என்று மருத்துவமனை வட்டாரத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 

  

 

 

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மாணவிகள் மீதும், மாணவர் சங்கத் தலைவர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை கண்காணிப்பாளரைக் கண்டித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் தயாரானார்கள். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி செல்ல முற்பட்டனர். இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பிரகாஷ்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் லெனின், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலளர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பேரணியாக முழக்கங்களுடன் புறப்பட்டவர்களை போலிசார் தடுத்து நிறுத்தினார்கள். தடுப்புகளை கடந்து செல்ல பலர் முயன்றனர். அப்போது போலீசார், காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பதாக தொடர்ந்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று எஸ்பியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு போராட்டக்களாரர்கள் கலைந்து சென்றனர். 

 

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறியதாவது..  

 

பேச்சுவார்தையின் போது.. இதுபோன்ற விரும்பத்தகாத செயல் இனிமேல் நடக்காமல் இருக்க காவல்துறை ஒத்துழைப்பு அளிப்பதாகவும், நடந்துள்ள சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் எஸ்.பி. செல்வராஜ் சங்கத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது ஆனால் எங்கள் கட்சி தலைமை என்ன முடிவுகள் எடுக்கிறதோ அதுபடி செயல்படுவோம் என்று கூறி வந்திருக்கிறோம் என்றார்.  

 

 

அதே நேரத்தில் கோவை எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைமே அனுமதி அளித்துள்ளது. அதேபோல மாணவர்கள் மீது தாக்கிய புதுக்கோட்டை எஸ்.பி. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றனர் மாணவர் சங்க நிர்வாகிகள். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.