பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மணிவண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கோவை பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மணிவண்ணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுகோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்தள்ளுபடி செய்யப்பட்டிருந்தநிலையில் உயர்நீதிமன்றமும் அந்த மனுவை தற்போது தள்ளுபடி செய்துள்ளது.