முதல்வரின் தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அரசியல் கட்சியினர்..! (படங்கள்)

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்திருக்கும் தமிழக முதல்வரின் இல்லத்தில், நேற்று (21-10-2020) அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அப்போலோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் ஆகியோர் நேரில் சென்று, தமிழக முதல்வரின்தாயார்மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவருகின்றனர். அந்த வகையில் நேற்று பா.மா.கதலைவர் ஜி.கே.மணி, சமத்துவ மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லாஆகியோர் முதல்வரின்தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும், அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டியும் முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முதல்வரின் தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe