Advertisment

காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை (படங்கள்)

Advertisment

காயிதே மில்லத்தின் 127 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதேபோல் அதிமுக சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அக்கட்சி நிர்வாகிகளுடன் வந்து காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

admk congress mdmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe