Advertisment

பிப்.27ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

n

Advertisment

வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் ஞாயிறு (27ம் தேதி) அன்று போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சொட்டு மருந்து முகாம் காலை 7மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட நாளில் கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்றும், முகக்கவசம் அணிந்து வரும் பெற்றோர்கள் மட்டுமே முகாம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் 5 வயதிற்குட்பட்ட 42.3 லட்சம் பேருக்கு சொட்டுமருந்து போடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe