ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்திக்கொண்ட காவலர்கள்..! (படங்கள்)

02:55 PM Apr 19, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,619 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 1,44,168 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (19.04.2021), மாம்பலம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT