Skip to main content

அளவுக்கு மீறினால் அட்வைசும் நஞ்சு...! காஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைப்பதாக மிரட்டிய எஸ்எஸ்ஐ!

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

 

policemen incident in salem

 

சேலத்தில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட காவலருக்கு சக காவலர் குடும்பத்தினர் அட்வைஸ் செய்ததால், ஆத்திரம் அடைந்த அவர் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்து விடுவேன் என மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் அன்னதானப்பட்டி லைன்மேட்டில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்கள் வசிக்கின்றனர். இதே குடியிருப்பில் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் மகேந்திரன் என்பவரும் வசிக்கிறார்.

 

மகேந்திரனுக்கு, மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். அவருடைய குடிப்பழக்கத்தால், மனைவி கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில், புதன்கிழமை (ஏப். 13) இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், சத்தம் போட்டு தனக்குத்தானே ஆபாச வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தார். இதை சகிக்க முடியாத அக்கம்பக்கத்தினர் அவரை கண்டித்துள்ளனர்.

 

பலரும் அவரை கண்டித்ததாலும், அட்வைஸ் செய்ததாலும் ஆத்திரம் அடைந்த மகேந்திரன், இதற்கு மேலும் யாராவது திட்டினாலோ, தனக்கு அட்வைஸ் செயதாலோ காஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்து விடுவேன் என்று மிரட்டியபடியே தனது வீட்டுக்குள் ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர் குடும்பத்தினர், இதுகுறித்து உடனடியாக மாநகர காவல்துறை ஆணையருக்கு தகவல் அளித்தனர்.

 

இந்த குடியிருப்புக்கு எதிரில்தான் காவல்துறை ஆணையர் அலுவலகம் இருக்கிறது. அதனால் தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

 

காவல்துறையினர், மகேந்திரனை பிடித்து அறிவுரை கூறினர். அவரை தனியாக விட்டால் ஏடாகூடமாக ஏதேனும் செய்து விடுவார் எனக்கருதிய காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குடிபோதை எஸ்எஸ்ஐயின் மிரட்டலால் சம்பவத்தன்று இரவு காவலர் குடியிருப்பில் அனைத்து குடும்பத்தினரும் தூக்கம் தொலைத்தனர். இந்த சம்பவம் காவலர் குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.