Skip to main content

தற்கொலையை தடுத்த காவலர்... சாலையில் அழுது புரண்ட பெண்கள்!

Published on 31/07/2022 | Edited on 31/07/2022

 

The policeman who prevented ... the women were crying on the road!

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தங்களது விவசாய நிலம் வழியாக மின் கோபுரம் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மின் இணைப்பு கொண்டு செல்ல திட்டமிடப்படுவதாகவும், இதனால் தங்களது விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு எதிராகக் குரல் கொடுத்தால் தங்களை ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள் எனவும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நான்கு பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நிலத்தின் உரிமையாளர்களான மகேஸ்வரி, கவிதா மற்றும் அவரது உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும்பொழுதே தற்கொலை முயற்சிக்காக அவர்கள் வந்த காரில் மண்ணெண்ணெய் கேனையும் எடுத்து வந்திருந்தனர். அதனைத் தெரிந்துகொண்ட தனிப்பிரிவு காவலர் அருண், அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது காரில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு ஓடினார். இதனைத் தூரத்திலிருந்து பார்த்த பெண்கள் காவலர் அருணை துரத்திக் கொண்டே ஓடினர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மண்ணெண்ணெய் கேனை தூக்கிக்கொண்டு ஓடிய காவலர் அவற்றை கீழே ஊற்றியதும், துரத்திச் சென்ற பெண் ஒருவர் 'ஏன் சார் இப்படி அநியாயம் பண்றீங்க...' மனுஷனாயா நீ எல்லாம். எங்களை நிம்மதியா சாகக்கூட விடமாட்டீங்களா'' என திட்டினார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சாலைக்கு வந்த அவர்கள் சாலையில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது காவலர் தரப்பில் உங்கள் 'பிரச்சனையை சொல்லுங்கள் தீர்த்து வைப்பார்கள். ஆனால் அதற்கு எதற்கு தற்கொலை முயற்சி எல்லாம் எடுக்கிறீர்கள்' என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.