Skip to main content

மது போதையில் கிடந்த காவலர்; காவல் நிலையத்திலேயே கலவரம் 

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

A policeman lying under the influence of alcohol; Riot at the police station

 

சாலையில் மது போதையில் கிடந்த நபரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்ததில் அந்த நபர் மற்றொரு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்தது.

 

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பிரீமியர் ரமேஷ் மற்றும் அவரது தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது புதுச்சேரி - கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியான கண்ணியக்கோவில் நான்குமுனை சந்திப்பில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுபோதையில் அங்கிருந்த பொதுமக்களை ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தார்.

 

உடனடியாக அங்கு சென்ற போலீஸ் ஏட்டு ரமேஷ் மற்றும் போலீசார் அந்த நபருக்கு வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர். ஆனால் போலீசாரை பார்த்து அந்த நபர் ஆபாசமாக திட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். உடனடியாக அந்த நபர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் மிகுந்த போதையில் இருந்த அந்த நபர் அங்கிருந்த காவலர்களை மிரட்டியதோடு ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். ''நானும் போலீஸ்காரன் தான். என்னை ஒன்னும் செய்ய முடியாது'' என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை கைகலப்பாக மாற போலீசாருக்கும் போதை ஆசாமிக்கும் இடையே மோதல் உருவானது. 'என் மீது எந்த பிரிவுகளிலும் வழக்கு போடுங்கள் ஆனால் உங்கள் மீது நான் வெடிகுண்டு வீசுவேன்' என மிரட்டல் விடுத்தார் அந்த போதை நபர். பின்னர் காவல் நிலையத்திலிருந்து தப்பிக்க முயன்ற அந்த நபரை போலீசார் பிடித்து மீண்டும் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் கடலூரை அடுத்துள்ள கீழ்புவானிக்குப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பதும், இவர் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது