Skip to main content

பாலியல் தொந்தரவு; போலீஸ்காரர் கைது

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் பாலமுருகன். இவர் சம்பவத்தன்று குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பாலமுருகன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காதலிப்பதை அறிந்த பாலமுருகன், மறைந்து இருந்து தனது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்து கொண்டார். 

 

Thiruchendur



தனது செல்போனில் எடுத்த அந்தப் படத்தை, தனது நண்பரும் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ள சசிகுமாரின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார். இருவரும் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர். 
 

போலீஸ்காரர் சசிகுமார் மேல புதுக்குடி கோவிலுக்கு சென்று, அங்கு வந்த காதல் ஜோடியை வழிமறித்து, ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டினார். அந்த வாலிபர் தன்னிடம் பணம் இல்லை என்றதும், எப்படியாவது பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் சசிகுமார், அந்த சிறுமியை பிடித்து வைத்துக்கொண்டு, யாரிடமாவது வாங்கிக்கொண்டு வா என்று அந்த வாலிபரை மட்டும் அனுப்பி வைத்துள்ளார். 


 

இதையடுத்து அந்த வாலிபர் பணத்தை எடுத்து வரச் சென்றார். அப்போது சசிகுமார், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் திரும்பி வந்த அந்த வாலிபர், தன்னால் ரூ.5 ஆயிரம் மட்டுமே கடன் வாங்க முடிந்தது என்று தெரிவித்து அந்தப் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சசிகுமார் தனது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டி அவர்களை அனுப்பி வைத்தார். போலீஸ்காரர் மிரட்டியதைப்போலவே பாலமுருகனும் தனது செல்போனில் உள்ள புகைப்படத்தை காண்பித்து, அந்த சிறுமியிடம் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கலாம் என்று முடிவு செய்தனர்.
 

இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி நேற்று புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ்காரர் சசிகுமார், பாலமுருகன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.