Skip to main content

காவலர் வில்சன் கொலை விவகாரத்தில் முன்னேறும் என்.ஐ.ஏ!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கு என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்ட பிறகு விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. சென்னை, கடலூர், காயல்பட்டினம் போன்ற இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜன.08-ந்தேதி காவல் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.

 

police wilson issue

 



இந்த வழக்கில் விசாரணை நடத்திய தமிழ்நாடு காவல்துறை அப்துல் சமீம், தவ்பீக் என தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தது. பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்த நாகர்கோவில் பாறசாலையை சேர்ந்த அப்துல் சமீம், கடலூரை சேர்ந்த காஜாமைதீன், ஜாபர் அலி, அப்துல் சமது உள்ளிட்ட சிலர் சிக்கினர். தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதால், வழக்கு அண்மையில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், காயல்பட்டினத்தில் உள்ள தவ்பீக்கின் உறவினர் பாத்திமா வீட்டில் இன்று காலை என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து வங்கி பாஸ்புக், செல்போன் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதேபோல், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், பரங்கிப்பேட்டை, புத்தூர் கொள்ளுமேடு பகுதியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. தீவிரவாத கும்பலுக்கு சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சிம்கார்டு வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில், அவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.