Skip to main content

திருநங்கையிடம் பாலியல் அத்துமீறல்: காவல்துறை அதிகாரி மீது வழக்கு!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

police who went for investigation misbehaved with transgender

 

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பண்ணாரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகள் உமாஸ்ரீ (30). திருநங்கையான இவர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்த செல்ஃபோன் ஒன்று திருடு போனது. இதை அவரது வீட்டு அருகில் வசிக்கும் ஒரு பெண்தான் திருடியிருப்பார் என்ற சந்தேகம் உமா ஸ்ரீக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

புகாரின் பெயரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ்காரர் மூவேந்தன் வேல்பாரி (50) என்பவரை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்தனர். அங்கு சென்று உமாஸ்ரீயிடம் விசாரணை நடத்திய மூவேந்தன் வேல்பாரி, ஆபாச வார்த்தைகள் பேசியதோடு பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இதேபோல உமாஸ்ரீ மொபைலைத் திருடியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணிடம் சென்று விசாரணை நடத்திய மூவேந்தன் வேல்பாரி, அந்தப் பெண்ணின் செல்ஃபோன் எண்ணை வாங்கிக்கொண்டு இரவில் வருவேன் என்று கூறி ஆபாசமாகப் பேசியுள்ளார்.

 

இதையடுத்து உமாஸ்ரீ கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில்,  விசாரணைக்கு வந்த போலீஸ்காரர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். மேலும், விசாரணைக்கு வந்தபோது குடிபோதையில் இருந்ததாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து விசாரணை நடத்திய ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர், மூவேந்தன் வேல்பாரி மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டார். இதன்படி போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.