Skip to main content

வெளியூர் சென்றதால் உயிர் தப்பிய காதல் ஜோடி... வெறிச்செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர்!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

The police who arrested those involved in the hysteria

 

தென்காசி மாவட்டத்தின் சுரண்டை நகரம் அருகேயுள்ள சிவகுருநாதபுரத்தின் பாறையடித் தெருவைச் சேர்ந்தவர் விவேக்குமார் (27). இவருடைய தந்தையான ராதாகிருஷ்ணன் காலமானதால் அவர் நடத்திவந்த காய்கறிக் கடையை தொடர்ந்து நடத்திவருகிறார். எனினும், விவேக்குமாரின் குடும்பத்தினர் ஓரளவு வசதி வாய்ப்பு கொண்டவர்கள்.

 

விவேக்குமாரும் சுரண்டையைச் சார்ந்த பெரியமாரிதுரையின் மகள் அன்னலட்சுமி (26) இருவரும் பள்ளிப்படிப்பு முதல், ஒன்பது ஆண்டுகளாகவே தொடர்ந்து காதலித்து வந்திருக்கின்றனர். இருவருக்குள்ளேயும் ஆழமான காதல். இருவரும் வெவ்வேறு பிரிவைச் சார்ந்தவர்கள் என்றாலும், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதையடுத்து காதலர்கள் நேற்று முன்தினம் சுரண்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். இரு வீட்டாரையும் காவல்நிலையம் வரவழைத்த போலீசார், அவர்கள் இருவரும் திருமண வயது வந்த மேஜரானவர்கள். அதனால் எந்தவிதமான பிரச்சினையும் கூடாது என அறிவுறுத்தி எழுதி வாங்கியுள்ளனராம்.

 

The police who arrested those involved in the hysteria

 

இதன்பின் நேற்றிரவு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் உடனடியாக பாதுகாப்பின் பொருட்டு வெளியூர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் காதல் திருமண ஜோடி வீட்டில் இருப்பதாகக் கருதிய மர்ம நபர்கள் சிலர், நேற்று நள்ளிரவு விவேக்குமாரின் வீட்டில் அவர்களைத் தீர்த்துக் கட்டும் வகையில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் வீட்டிலிருந்த மின் மோட்டார் பம்ப் செட் மற்றும் பிளாஸ்டிக் குடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதுகுறித்து விவேக்குமாரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

 

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான டீம், கழுநீர்குளத்தின் மதன்குமார், அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், சென்னையைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் கார்த்திக் மூவரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்திவருகின்றனர். காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சுரண்டைப் பகுதியைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.