Skip to main content

"போலீஸையே விரட்டிப் பிடித்த போலீஸ்..!" வைரலான சிசிடிவி காட்சி!!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

சமூக வலைத் தளமான வாட்ஸ்அப்பில் பரவும் அந்த காட்சி, பார்ப்பவர்களை மிரள வைக்கிறது. சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் டிராபிக் போலீஸ்காரர், திடீரென சாலையின் குறுக்கே சென்று ஒரு இருசக்கர வாகனத்தை மடக்கி பிடிக்கிறார். (ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடி இருந்த கொக்கு மாதிரி...) இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழ, பின்னர் அவரை கைத் தாங்கலாக அழைத்து வந்து போலீஸ் ஜீப்பில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். 

 

police

 

இதுபற்றி நாம் விசாரித்தபோது, சம்பவம் நடந்தது சென்னை தேனாம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட கே.பி.தாசன் சாலை சந்திப்பு. பாய்ந்து சென்று பிடித்தவர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், பிடிபட்டவர் அக்யூஸ்ட் அல்ல. அவருக்கு கீழே வேலை பார்க்கும் போக்குவரத்து காவலர் தர்மன். 

 

சம்பவம் நடந்த அன்று (21-11-2018) பணியில் இருந்த போக்குவரத்து காவலர் தர்மன். தனக்கு மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விடுப்பு தரவில்லை. "எனது தாயின் நினைவேந்தல் நிகழ்ச்சி (காரியம்) நடத்த வேண்டி உள்ளது. அதற்கு நான் பணம் திரட்ட வேண்டும். உறவுக்காரர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். ஆனால், இன்ஸ்பெக்டர் லீவு கொடுக்க மறுக்கிறார். இப்ப நான் என்ன செய்ய.?" இப்படி வாக்கி டாக்கியில் பேச. அது சிட்டி முழுக்க எதிரொலித்துவிட்டது. உடனடியாக வாக்கி டாக்கியை ஒப்படைத்துவிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு வருமாறு தருமனிடம் தகவல் சொல்லப்பட்டது.

 

மேலும், டி.சி மற்றும் ஜே.சி ஆகியோர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பிடித்து எகிரவே, கடுப்பான இன்ஸ்பெக்டர், பாய்ந்து சென்று தருமன் மடக்கிப் பிடித்திருக்கிறார். அதாவது, பணி நேரத்தில் தர்மன் போதையில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தவே. (போதையில் தான் இருந்திருக்கிறார்) இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது எல்லாம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இப்போது வெளி வந்திருக்கிறது. இதுபற்றி தருமன் உடன் பணியாற்றும் மற்றொரு காவலரிடம் நாம் பேசினோம். "வழக்கமாக தர்மனுக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு. ஆனால், அன்றைக்கு மதுபோதையில் இருந்தாரா? என தெரியவில்லை. ஆனால், இன்ஸ்பெக்டர் வந்து யாரையும் மரியாதையாகவே நடத்தமாட்டார்" என்றார்.

 

ஓடிச் சென்று பிடிக்கும்போது, அந்த வழியாக சென்ற சரக்குவேன் அருகே தர்மன் கீழே விழுந்தார். ஒரு அடி முன்னால் தள்ளி விழுந்திருந்தால், இந்நேரம் தர்மனுக்கு காரியம் நடந்திருக்கும். வழக்கமாக ஹெல்மட் போடாதவனைத் தான், இந்த மாதிரி விரட்டிப் பிடிப்பாங்க. ஆனால், ஒரு டிராபிக் போலீஸையே, இன்னொரு டிராபிக் போலீஸ் விரட்டிப் பிடித்த கொடுமையை எங்கே போய் சொல்வது?.. என்றார்.


    

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.