Skip to main content

முல்லைப் பெரியாறு ஆற்றில் குளிக்க வேண்டாம்!! ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை!!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

முல்லைப் பெரியாறு ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என தண்டோரா மூலம் போலீஸார் விழிப்புணர்வு மூலம் எச்சரித்து வருகிறார்கள்.
 

police warns people not to take bath in mullai periyar river


தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆண்டிபட்டி அருகே உள்ள வருஷநாடு, கண்டமனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் போடி பகுதியில் கனமழை பெய்து கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் வராக நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைப்பெரியாறு ஆற்றுப்படுகையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் தொடர் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் முல்லைப் பெரியாற்று நீரில் மூழ்கி தேனி மாவட்டத்தில் நான்கு பேர் பலியானார்கள்.

எனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், உத்தமபாளையம், லோயர்கேம்ப் மற்றும் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்டோரா மற்றும் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பொதுமக்கள் ஆற்றுப் பகுதிகளில் குளிக்க, துணி துவைக்க செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

குழந்தைகளையும் சிறுவர்களையும் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் விளையாடவோ குளிக்கவோ அனுமதிக்க வேண்டாமென அறிவுறுத்தியும் வருகிறார்கள். இதனை மீறி ஆற்று பகுதிக்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
 

police warns people not to take bath in mullai periyar river


தேனி மாவட்ட போலீஸ் சூப்பரிண்டன்ட் சாய்சரண் உத்தரவின்பேரில் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது நீர்நிலைகளில் குளிப்பதால் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவை வர வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரைக் காய்ச்சி பருக வேண்டும் என எஸ்.பி. சாய்சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையம்  உட்பட்ட பகுதிகளில்  தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.