Skip to main content

சித்திரை பௌர்ணமி; விஐபி பக்தர்களுக்காக சாலைகள் மூடல் - சாதாரண பக்தர்களை மிரட்டும் காவல்துறை 

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Police threaten devotees who come to have darshan  Tiruvannamalai

 

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாரைத் தரிசிக்கவும், கிரிவலம் வரவும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளார்கள். சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு 3000 போலீஸார் சொச்சம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்ணாமலையார் தரிசனம் மற்றும் கிரிவலம் வரும் பக்தர்களை ஒழுங்குபடுத்துகிறோம் என்கிற பெயரில் சில குளறுபடிகளை செய்துள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.

 

ராஜகோபுரம் வழியாக சாதாரண பக்தர்களும், அம்மணியம்மன் கோபுரம் வழியாக விவிஐபி பக்தர்களும் கோவிலுக்குள் சென்று வருவார்கள். விவிஐபி பக்தர்கள் செல்லும் பாதையில் காவல்துறை அதிகாரிகள் அவர்களது குடும்பத்தினர் உட்பட அரசு உயர் அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள் செல்வார்கள். இந்த அம்மணி அம்மன் கோபுரம் உள்ள வடக்கு மாடவீதி சாலையில் சாதாரண பக்தர்கள் செல்லாத வகையில் தடுக்கப்பட்டு விட்டது. இரட்டை பிள்ளையார் கோவில் சாலையில் பூதநாராயணன் கோவில் முன்பு தடுப்புகள் வைத்து யாருமே செல்லாத வண்ணம் முற்றிலும் தடை செய்யப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்

 

இதனால் அதிர்ச்சியான அந்த சாலையில் உள்ள வியாபாரிகள் மே 4 ஆம் தேதி இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த டி.எஸ்.பி குணசேகரனிடம் வியாபாரிகள், இந்த சாலையில்தானே வழக்கமாக பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள், இதனை ஏன் மூடுனீர்கள் என கேள்வி எழுப்பியபோது, இந்த சாலை சிறியது பக்தர்களுக்கு பற்றாது, நெருக்கடியாக இருக்கும், அதனால் மூடிவிட்டோம் என்றார். இங்க கடை வச்சியிருக்கற நாங்க என்ன செய்யறது? ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து பொருட்களை வாங்கி வந்து வச்சுயிருக்கோம் எனச் சொன்னபோது, அதுக்கு  என்ன செய்ய முடியும், தூக்கிக்கிட்டு போய் அங்க எங்காவுது போடுங்க என்றவர், இப்போ இங்கயிருந்து எழுந்து போகலன்னா போலீஸ்னா யார்னு காட்டிடுவேன் என மிரட்டி வியாபாரிகளை விரட்டியிருக்கிறார்.

 

Police threaten devotees who come to have darshan  Tiruvannamalai

 

பக்தர்களை, வியாபாரிகளை இப்படி தவிக்கவிட்டுள்ள போலீஸ் அதிகாரிகள், விஐபிகள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பக்காவாக செய்துள்ளனர். லட்சக் கணக்கான பக்தர்கள் வரும்பாதையில் கார்களில் கோவில் வாசல் வரை வரவும், அவர்கள் கோவிலுக்குள் எந்த தடையும், தொந்தரவும் இல்லாமல் சென்று அண்ணாமலையாரை வணங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரிசனம் செய்ய வைத்து வருகின்றனர் காவல்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகமும். தரிசிக்க வருபவர்களில் 30 சதவிதம் தான் அரசியல்வாதிகள் மீதி 70 சதவிதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதித்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பொதுமக்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என இரும்பு தகரங்கள் வைத்து அந்த சாலைகள் மூடிவைத்துள்ளனர். 

 

கோவிலுக்குள் மட்டும் 400 போலீஸாரை பாதுகாப்புக்காக நிறுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். கோவிலுக்குள் அவ்வளவு போலீஸாரே தேவையில்லை, ஏன் இவ்வளவு போலீஸார் என்கிற கேள்வியை ஒவ்வொரு பொதுமக்களும் கேட்கின்றனர். 

 

படங்கள்– எம்.ஆர்.விவேகானந்தன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.