Skip to main content

லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர்; நடவடிக்கை எடுத்த அதிகாரி

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

police sub inspector issue in sriperumbudur action taken by sp

 

அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் சர்ச்சையாகி வரும் நிலையில், தற்போது காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ மற்றும் புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் கோதண்டராமன். இவர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை மிரட்டுவதும், புகாரை வாபஸ் வாங்கச் சொல்லுவதும், கட்டப் பஞ்சாயத்து செய்வது மற்றும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதுமாக  இருந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் இவர் காவல் நிலைய வாயில் முன்பு லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்றும், புகாரை வாபஸ் பெற வலியுறுத்தும் ஆடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் , கோதண்டராமனை மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாகத் துறை ரீதியான விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்