Skip to main content

காவல்நிலையம் முன்பு அரிவாளோடு டிக் டாக்; மீண்டும் சிறைக்கு சென்ற இளைஞர்கள்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

பெண் ஒருவரிடம் தகராறு செய்த வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வந்த 3 பேர் கையெழுத்திட காவல் நிலையத்திற்கு வந்த போது அரிவாளுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இளைஞர்கள் அந்தந்த காலத்தில் ஏதேனும் ஒன்றின்மீது அதீத ஈடுபாடு கொண்டு அதில் இருக்கும் விபரீதங்களை உணராமல் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாவே கொண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் டிக்டாக் இளசுகளுக்கு குதுகலத்தை கொடுத்துவருகிறது. அதில் ஈடுபட்டு பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அந்தவகையில் தலையாமங்கலம் காவல்நிலையத்தின் முன்பு இருந்த கருவேலம் மரத்தை வெட்ட எடுத்துவந்த அரிவாளுடன் டிக்டாக் ஆடியர்கள் ஐந்து பிரிவுகளின் கீழ் கைதாகி இருக்கின்றனர்.

The police station was formerly tik tak; Young men who went back to prison


திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பைங்காட்டூரை சேர்ந்தவர் ராஜவேலு இவரின் தம்பி ஐயப்பன் உறவினர் பிரதீப் ஆகிய 3 பேரும் கூலி தொழிலாளிகள். இதில் ராஜவேலுவும், ஐயப்பனும் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த தீபா என்கிற பெண்ணை கடந்த மாதம் 30 ஆம் தேதி தாக்கியதாக கூறி அவர்கள் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். தினமும் காலையில் தலையாமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜவேல், ஐயப்பன் ஆகிய இருவரும் தங்களது உறவினரான பிரதீப் என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று காலை தலையாமங்கலம் காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தனர். அங்கிருந்த போலீசார் ஒரு அரிவாளை எடுத்துக்கொடுத்து எதிரே இருந்த கருவேலம் புதர்களை வெட்டச்சொல்லி அனுப்பியிருக்கிறார். 

அரிவாளை வாங்கியவர்கள் காவல்நிலையத்தின் வாசலுக்கு தனித்தனியாக வெளியேவந்த மூன்றுபேரும் அந்த அரிவாளை மறைத்து வைத்திருந்து எடுத்து மிரட்டுவது போலவும், கைகளால் சுழட்டுவது போலவும் "எவனா இருந்தா எனக்கென்ன" என திரைப்பாடலுக்கு அரிவாளோடு வீடியோ எடுத்து அதனை டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த வீடியோ தமிழகம் முழுவதும் கசியத் தகவல் அறிந்த மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக் காவல்நிலையம் முன்பு அரிவாளுடன் வீடியோ எடுத்து வெளியிட்ட 3 பேரையும் உடனடியாக பிடிக்க தலையாமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஐந்து பிரிவில் வழக்குபதிவு செய்து மீண்டும் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். காவல்நிலையம் ஒரு மனிதனை சீர்படுத்தும் என்கிற நிலைமாறி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் அதை உணராத இளைஞர் கூட்டம் விளையாட்டுத்தனமாக எதையாவது செய்து சீர் கெட்டுப் போகிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.