Skip to main content

சீனாவிற்கு கடத்தப்படும் கடல் செல்வங்கள்; மடக்கிப் பிடித்த போலீஸ்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

Police seized marine treasures that were being smuggled to China

 

தூத்துக்குடியை அடுத்த வேம்பார் கடற்பகுதியில் கடற்பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலால் அலர்ட் ஆன க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான க்யூ பிரிவு எஸ்.ஐ ஜீவமணி, தர்மராஜ் உள்ளிட்ட போலீசார் வேம்பார் பகுதியில் கண்காணிப்பிலிருந்தனர். அது சமயம், அக்கரை பகுதியிலிருந்து கடற்கரைக்கு வந்த லோடு வேன் ஒன்றில் அளவுக்கதிகமான சரக்கு மூட்டைகள் ஏற்றப்பட்டு தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது சந்தேகத்தைக் கிளப்பவே, க்யூ பிரிவு போலீசார் அந்த லோடு வேனை மடக்க முயற்சித்த போது, அந்த வாகனம் நிற்காமல் வேகமெடுத்திருக்கிறது. 

 

க்யூ பிரிவு போலீசார் அந்த வேனை விரட்டிய போது தரைக்குடி தங்கம்மாள்புரம் வழியாக கிராம வழிச்சாலைகளின் மூலமாக சூரங்குடி நோக்கி வேன் விரைய, தொடர்ந்து விரட்டிய போலீசார் சூரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். அதனைச் சோதனையிட்ட போது 10 மூட்டைகள் சுறா மீன் இறக்கைகள், 11 மூட்டை திருக்கை மீன் பூ உள்ளிட்ட கடல் செல்வங்களிருப்பது தெரியவந்தது.

 

Police seized marine treasures that were being smuggled to China

 

இதையடுத்து வேனை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் வேதாளை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரைக் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்தவிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின் க்யூ பிரிவு போலீசார் அவற்றை லோடு வேனுடன் பறிமுதல் செய்திருக்கிறார்கள். சிக்கிய சுறாமீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ ஆகியவை இலங்கைக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்தது. கடல் செல்வங்கள் என்பதால் பிடிபட்டவரையும், மூட்டைகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டோம். இவை சீனா கொண்டு செல்லப்பட்டு அங்கு உணவிற்கான சூப்பும் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்படுகிறதாம். இதன் இங்குள்ள மதிப்பு 80 லட்சத்திற்கும் மேல் என்றாலும் சீனாவில் இரண்டு கோடியைத் தாண்டும் என்கிறார்கள் க்யூ பிரிவு போலீசார்.

 

இதனிடையே கைப்பற்றப்பட்ட சுறா மீன் இறக்கைகள் மற்றும் திருக்கை மீன் பூ மூட்டைகளை விளாத்திகுளம் வனத்துறையினர் தீ வைத்து அழித்ததுடன் கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.