திருச்சி மாவட்டம், பீமநகர் பகுதியில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இதனை அப்பகுதி வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு, திருச்சிசெசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், மூட்டைகளைச் சாலையில் விட்டுச் சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
1,500 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றிய காவல்துறை!
Advertisment