Advertisment

அதிமுக தலைமையகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு! (படங்கள்)

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா,பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும்பிப். 8 ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை9 மணிக்கு சசிகலாதமிழகம் கிளம்புவார்என தெரிவிக்கப்பட்டுள்ளது.சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே சென்றபோது அவரது காரில் அதிமுககொடிகட்டப்பட்டிருந்தது குறித்துசர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சேலம்நகர அதிமுகநிர்வாகிகள் சார்பில்போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுககொடியைசசிகலா பயன்படுத்தக் கூடாது என அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்நேற்றுஅமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர்மீண்டும் டிஜிபியை நேரில் சந்தித்துஅதிமுக கொடியைசசிகலா பயன்படுத்தக் கூடாதுஎனப் புகாரளித்தனர்.

இந்நிலையில் அதிமுக தலைமையகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு போடப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையகம் அமைந்துள்ள அவ்வைசண்முகம் சாலையில் போலீசார் தொடர்ந்து தீவீரபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

admk head office police securities
இதையும் படியுங்கள்
Subscribe