Skip to main content

காவல்துறை ஆய்வாளர் உள்பட 3 பேருக்கு மீண்டும் கரோனா 'அட்டாக்'!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

police second time coronavirus salem district

 

சேலத்தில், காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட மூவர் ஏற்கனவே கரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள நிலையில், அவர்களுக்கு இரண்டாம் முறையாகக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, காவல்துறையினர் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தில், கரோனா பரவலின் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த நோய்த்தொற்று, கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு பரவலின் வேகம் அதிகரித்தது. தற்போது தினமும் சராசரியாக 300 பேருக்கு மேல் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது.

 

நோய்த்தொற்றால் சாமானியன் முதல் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மாநகர காவல்துறையினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் செந்தில், உதவி ஆணையர்கள் ஆனந்தகுமார், நாகராஜன் மற்றும் 5 காவல் ஆய்வாளர்கள் உள்பட 170- க்கும் மேற்பட்ட காவலர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

 

இவர்களில் 158 பேர் சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்குத் திரும்பினர். 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன், பெண் தலைமைக் காவலர் உள்பட 3 பேர் ஏற்கனவே கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

 

Ad

 

இந்நிலையில், தற்போது அவர்கள் மூன்று பேருக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. ஆய்வாளருடன் நெருக்கமாக இருந்த காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 

ஒருமுறை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்குள் மறுமுறை தாக்காது என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், கரோனாவில் இருந்து மீண்டு வந்த காவல்துறையினருக்கு குறுகிய காலத்திலேயே நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது காவல்துறையினர் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.