Skip to main content

மெட்டி போடும் வீடியோ வெளியானதால் நடிகை நிலானி தலைமறைவு: தேடுகிறது போலீஸ்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
nila



உதவி இயக்குநர் காந்தி தற்கொலை விவகாரத்தில் சின்னத்திரை நடிகை நிலானி தலைமறைவாக உள்ளார். நிலானியின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவரை கே.கே.நகர் போலீசார் தேடி வருகின்றனர். 
 

கடந்த 15ஆம் தேதி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார் நிலானி. அந்தப் புகாரில், தன்னிடம் பழகிய காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளத்திற்கும் வந்து தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். 
 

புகாரைப் பெற்ற போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்தார். இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் காந்தியின் உடல் திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 

காந்தி உயிரிழந்தவுடனேயே, நிலானியும் காந்தியும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாக குறிப்பிட்ட காந்தியின் உறவினர்கள், அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டனர். 
 

வீடியோக்களிலும், புகைப்படங்களிலும் காந்தியும், நிலானியும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அவை அனைத்தும் படுக்கை வசதி கொண்ட ஆம்னி சொகுசுப் பேருந்தில் எடுக்கப்பட்டதாகும். 

 

nilani nila


 

nilani nila


 

nilani nila


அதில் ஒரு வீடியோவில் காந்தி லலித்குமாருடன் உல்லாசமாக இருக்கும் போது காந்தியின் கால்மேல் தனது காலை வைத்து நிலானி மெட்டியை காட்டும் போட்டோவும் உள்ளது. வீடியோவும் உள்ளது.
 

மேலும் வீடியோவில் பேசியிருக்கும் காந்தி, தனக்கும் நிலானிக்கும் திருமணமான நாள் செப்டம்பர் 4ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளார். 
 

காந்தியை பொறுத்தவரை நண்பராகத்தான் பழகினேன் என்று நிலானி கூறியுள்ளார். இருப்பினும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் இருவரும் நெருக்கமாக இருப்பதுபோன்று உள்ளதால் நிலானியை விசாரிக்க முடிவு செய்துள்ளனர் போலீசார். 
 

வளசரவாக்கத்தில் உள்ள நிலானியின் வீட்டிற்கு பலமுறை போலீசார் சென்று பார்த்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரது செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. நிலானியை விசாரித்தால்தான் அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.