Skip to main content

மருமகளை வைத்து அத்தை பாலியல் தொழில்; விசாரணையில் பகீர்! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

police search in trichy and arrested 6 people

 

திருச்சி மாநகரம் பாலக்கரை கீழபுதூர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அதனையடுத்து அபிநிஷா, ரவிக்குமார், அசோக் மற்றும் பானு உட்பட ஆறு நபர்கள் சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர். இது தொடர்பாக அந்த ஆறு நபர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் இதில் பானு என்ற பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு சிறுமியின் அத்தை என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆணையர் காமினி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்