Skip to main content

நான் மட்டும் சாகணுமா? நீங்களும் செத்துப்போங்க... கரோனா நோயாளி மீது கொலைமுயற்சி வழக்கு... நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


டெல்லி சென்று திரும்பிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த 17 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 67 பேர் மற்றும் தாமாக முன்வந்த 21 பேர் என மொத்தம் 88 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.

 


பரிசோதனையின் முடிவில் 17 பேரின் குடும்பத்தில் 3 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆகமாட்டேன் என்று அடம் பிடித்தார். சுகாதாரத் துறையினர் அவரது வீட்டிற்கே சென்று அழைத்தும், ஒத்துழைக்கவில்லை. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிக்கு செல்போனில் அழைத்து, என்னால் வரமுடியாது என்று கூறியிருக்கிறார்.

 

 

issues



இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிகிச்சையில் இருந்த நோயாளி, நான் மட்டும் இங்க கிடந்து சாகணுமா? நீங்களும் செத்துப்போங்க எனக் கத்தியபடி, முகத்தில் அணிந்திருந்த மாஸ்கைக் கழற்றி டாக்டர் மீது வீசியும், செவிலியர் மீது எச்சில் உமிழ்ந்தும் தகராறில் ஈடுபட்டார்.

 

http://onelink.to/nknapp


இதையடுத்து, அரசு மருத்துவமனை செவிலியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நோய்த்தொற்று இருப்பது தெரிந்தும் செவிலியர் மீது எச்சில் உமிழ்ந்த குற்றத்திற்காக, நோயாளி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

-ஜெ.தாவீதுராஜ்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.