Skip to main content

ரயிலில் தவறவிட்ட பணம்,நகை; மீட்டுக் கொடுத்த போலீசார்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

police recovered missing money and jewelery from train

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்தவர் கவிதா. இவர் கடந்த 12ஆம் தேதி சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் அதிவிரைவு ரயிலில் ஏறி மதியம் சுமார் 12 மணியளவில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். ரயிலை விட்டு இறங்கிய அவர், தான் கொண்டு வந்த கைப்பையை மறந்து ரயிலிலேயே தவறவிட்டுள்ளார். பதறிப்போன கவிதா பெண்ணாடம் ரயில்வே நிலைய அதிகாரியிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதையடுத்து உடனடியாக விருத்தாசலம் போலீசார் அரியலூர் பகுதி ரயில்வே காவல்துறை துணை ஆய்வாளர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக விரைந்து சென்று அரியலூரில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நின்றதும், கவிதா பயணம் செய்த பெட்டியில் ஏறி அவர் மறந்து ரயிலில் தவறவிட்ட பையைப் பத்திரமாகக் கைப்பற்றினார். அதில் கவிதா வைத்திருந்த இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்கச் செயின் 2000 பணம் ஆகியவை அப்படியே பத்திரமாக இருந்துள்ளன.

 

அதை மீட்ட சிவகுமார் கவிதாவை வரவழைத்து அவர் வைத்திருந்த பொருட்கள் விவரம் கேட்டு அவை சரியாக இருந்ததையடுத்து கவிதாவிடம் பையோடு ஒப்படைத்தார். கவிதா கண்ணீர் மல்க காவல் துணை ஆய்வாளர் சிவக்குமார் உட்பட விரைந்து செயல்பட்டு உதவி செய்த காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி கூறினார். ரயில் பயணி தவறவிட்ட பையை உடனடியாக மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.