/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/polcioe434.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டபகுதிகளில் இன்று (31/03/2022) மாலை காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர், பில்லூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கைச் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த, சையத் உசேன் (வயது 49) என்பவரின் இரு சக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது, போதைப் பொருளான 2 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pooo444.jpg)
பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரை சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)