Police provided food fruits elephants occasion Ganesh Chaturthi

Advertisment

விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி அருகே எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் , மண்டல தலைமை வன பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர் அறிவுரையின்படி உதவி வன பாதுகாவலர், உதவி இயக்குனர் தலைமையில் வன சரக அலுவலர்கள் மற்றும் வன பணியாளர்களுடன் எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பை உணர்த்தும் விதமாக விழா கொண்டாடப்பட்டது.