Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 6ஆம் தேதி நடைபெறயுள்ள நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அதற்குத் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.