Skip to main content

நடிகர் கட்சியினரின் தொடர் மிரட்டல்! -நாளிதழ் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

police protection at dinamalar office

 

 

மதுரை தினமலர் அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் 4 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். ‘எதுவும் விவகாரமா? ஏன் இந்த பாதுகாப்பு நடவடிக்கை?’ என்று கேட்டோம், அந்த நாளிதழ் வட்டாரத்தில். “அதுவந்து.. நடிகர் கட்சி ஆளுங்க தொடர்ந்து மிரட்டுறாங்க. எங்க பத்திரிகைல செய்தி போட்டோம். அது அவங்களுக்கு பிடிக்கலயாம். அதனாலதான்.. தொடர்ந்து மிரட்டல்.” என்றனர். 

 

‘நடிகர் கட்சின்னு பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? தமிழ்நாட்டுல டி.ராஜேந்தர் தொடங்கி கமல்ஹாசன் வரைக்கும் கட்சி வச்சிருக்காங்க. எந்த நடிகர்ன்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?’ என்றதும், “சினிமால மாதிரியேதான்.. சட்டமன்றத்துலயும் நாக்கை துருத்தி பேசினாரு. பொதுக்கூட்ட மேடையிலும் கூட கோபத்துல கண்டமேனிக்கு பேசிருக்காரு. ஒருதடவை.. பத்திரிகைக்காரங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம.. த்தூ-ன்னு துப்பி பெரிய விவகாரமாச்சு. அவங்க வீட்டுக்காரம்மாவும், பிரஸ் மீட்ல.. பத்திரிகையாளர்களை.. நீ.. வா.. போ..ன்னு ஒருமையில பேசினவங்கதான். தலைமையே இப்படியிருந்தா.. தொண்டர்கள் எப்படியிருப்பாங்க? பத்திரிகை ஆபீஸ மிரட்டுறதெல்லாம் அவங்களுக்கு சர்வ சாதாரணம்ங்க..” என்று சீரியஸாக பேசினார்கள்.

 

தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை ‘மிரட்டல்’ என்று சினிமாவிலும் கூட அந்த நடிகர் வசனம் பேசியதில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.