Skip to main content

சுதந்திரப் போராட்ட தியாகி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போலீசார்..! 

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

Police pay homage to freedom fighter


புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகில் உள்ள பவளத்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், சுதந்திரப் போராட்ட தியாகி. வயது முதிர்வு, உடல் நலக் கோளாறு காரணமாக இன்று உயிரிழந்தார்.

 

சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலை உயிரிழந்த தகவல்அறிந்து வடகாடு காவல் உதவி ஆய்வாளர் மருதமுத்து உள்ளிட்ட போலீசார், அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு போலீசார் மரியாதை செய்ததை அங்கு திரண்டிருந்த உறவினர்கள் நெகிழ்ச்சியாகப் பார்த்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்