Skip to main content

"போய்ட்டு வரேன் மா..." தாயை கலங்க வைத்த காவலரின் கடிதம் !

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 Police passed away - Letter for mother

 

சென்னையில் பணிபுரிந்த காவலர் சேலம் மேட்டூர் அருகே தனது அம்மாவிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த காவலர் தற்கொலை சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மேட்டூரின், மேச்சேரி மல்லிகுந்தம் ஊஞ்சக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் 22 வயதான அன்பு ராஜ். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 2வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை ஆவடியில் வேலை செய்த அன்புராஜ் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு மருத்துவ விடுப்பு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது ஊஞ்சக்காடு கிராமத்திற்கு பயணப்பட்டுள்ளார் அன்பு. கிராமத்திற்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்து வந்துள்ளார். செப்டம்பர் 14 தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர், விஷம் அருந்திய நிலையில் கிடந்த அன்புராஜ் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

எனவே, இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் அன்புராஜின் பெற்றோர், உறவினர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அன்புராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 

 

அந்தக் கடிதத்தில் அன்புராஜ், "நான் போகிறேன் அம்மா, இவ்வளவு நாள் வாழ்ந்துவந்தே உனக்காகதான் அம்மா. எனக்கு என்ன ஆனதென்று தெரியல. மேலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கடிதம் எப்படியும் உங்களுக்கு படிச்சுக் காட்டப்படும். நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிடலாம் என நினைத்தேன். பின் அனைவரும் தவறாக பேச தொடங்கிடுவாங்க. நான் என் மனமறிந்து யாருக்கும் கெடுதல் செய்தது இல்லை. என் தலைக்குள் ஏதோ ஓடிட்டு இருக்கு. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெளியே எங்கும் செல்ல மாட்டேன் அம்மா. உங்க கூடவே தான் இருப்பேன். இதற்காகத்தான் வீட்டுக்கே வந்தேன். 'ஒருவன் நல்லவன் என்பதற்கு அவன் இறந்த பின் அவனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகளால் மட்டுமே கண்டறியப்படுகிறது'. என மிகவும் மனம் உருகி எழுதியுள்ளார். 

 

இதன் தொடர்ச்சியாக, அன்புராஜ் குடும்ப பிரச்சனை தொடர்பாக தற்கொலை செய்தாரா, பணிச்சுமை காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அன்புராஜ் பணியாற்றி வந்த சென்னை ஆவடி சிறப்பு காவல் படை பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அன்புராஜ் தற்கொலை சம்பவம் சக போலீசாரிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.