காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேர் பணியிட மாற்றம்!

police officers transfer tn govt additional secretary order

தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேரைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை காவல்துறை தலைமையகக் கூடுதல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக கணேசமூர்த்தி, தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி.யாக ராஜராஜன், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக சுரேஷ் குமார், பூந்தமல்லி சிறப்பு காவல்படை கமாண்டண்டாக செந்தில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

order police officers tn govt
இதையும் படியுங்கள்
Subscribe