Skip to main content

கொலைக் குற்றவாளியான  டி.எஸ்.பி யை தேடி கேரளா போலிசாா் மதுரையில் முகாம்

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
ke

       

    திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை டி.எஸ்.பி  ஹாிகுமாா் அடிக்கடி இரவு தனியாக குடங்கா விளை பகுதியில் உள்ள ஓரு வீட்டுக்கு காாில் வந்து செல்வார். வழக்கம் போல் நேற்று முன் தினம்  இரவு 9.30 மணிக்கு வந்த அவாின் காாின் முன் அதே பகுதி காவு விளையை சோ்ந்த எலக்ட்ரீசன் சணல்குமாா்(32) தனது  காரை நிறுத்தியிருந்தாா்.


           அப்போது டி.எஸ்.பி ஹரிகுமாா் அந்த காரை மாற்றி நிறுத்தச் சொல்லியிருக்கிறாா். அவா் டி.எஸ்.பி என தொியாமல் சணல்குமாா் ,  இருக்கிற இடத்தில் தான் இரண்டு காரும் நிற்கிறது.  இடம் இல்லாமல் வேறு எங்க நிறுத்த முடியும் என்றாா். உடனே இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது . இதனால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி,   சணல் குமாரை ரோட்டில் தள்ளி விட்டதில் கீழே விழுந்த சணல் குமாா் மீது அங்கு வேகமாக வந்த ஒரு காா் ஏறி இறங்கியது. 

 

h


              இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த சணல்குமாரை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பிய டிஎஸ்பி நெய்யாற்றின் கரை போலிசுக்கு தகவல் கொடுத்ததன் போில் போலிசாா் விரைந்து வந்து சணல் குமாரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்கு பதில் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதில் காவல் நிலையத்தில் வைத்தே இறந்த சணல்குமாரை பின்னா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

 

s


               இச்சம்பவம் உடனே காட்டு தீ போல் பரவியதையடுத்து அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது.  உடனே முதல்வர் பிணராய் விஜயனுக்கும் தொியவந்ததால் அவா் இரவோடு இரவாக டி.எஸ்.பியை சஸ்பென்ட் செய்து அவா் மீது கொலை வழக்கு பதிவு செய்ய டிஜிபி க்கு உத்தரவிட்டாா்.

 

ke


              இந்த நிலையில் செல்போனை சுவிட் ஆப் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கு ஹாிகுமாா் மதுரையில் உறவினா் வீட்டில் பதுங்கியிருப்பதாக கேரளா போலிசுக்கு தகவல் கிடைத்ததன் போில் மூன்று தனிப்படை போலிசாா் இன்று மதுரையில் முகாமிட்டுள்ளனா். 


               இறந்து போன சணல்குமாருக்கு மனைவியும் 3 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Next Story

'96' படத்தின் 2ம் பாகம் குறித்து வெளியான சுவாரஸ்யமான தகவல்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

96 second part movie update

 

கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். காதலர்களின் அழகான வாழ்வியலை தனது எதார்த்த நடிப்பின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து காதல் படங்களைப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் வேறு மாதிரியான உணர்வுகளைக் கொடுத்து பெரும் வெற்றி பெற்றது. கோவிந்த் வசந்தா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்தவகையில் 96 படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 

 

இந்நிலையில், 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பிரேம் குமார் 96 படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி விட்டதாகவும், இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குநரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.