Skip to main content

தற்கொலை வழக்கில் தலைமறைவான சிறை தம்பதி வார்டன்களை தேடும் தனிப்படையினர்!

Published on 27/02/2019 | Edited on 28/02/2019

திருச்சி சிறையில் வார்டனராக இருந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்வதற்கு காரணமாக சிறையில் உள்ள வார்டன் தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தற்போது வரை போலிஸ் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருப்பதால் இவர்களை பிடிக்க தனிப்படை நியமித்துள்ளனர். 

 police  looking for the undercover prison couple wardons in suicide case!

 

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் செந்தமிழ்செல்வி (23). திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் தனி கிளை சிறையில் 2ம் நிலை வார்டன். சுப்ரமணியபுரம் சிறை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கே.கே.நகர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தமிழ்செல்விக்கு பயிற்சியின்போது அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த வெற்றிவேல் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். வெற்றிவேல் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக உள்ளார். இதற்கு இடையில் வெற்றிவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு தயார் ஆகி வருவதும். அதற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர். 

 

 police  looking for the undercover prison couple wardons in suicide case!

 

இந்த நிலையில் வெற்றிவேல் - செந்தமிழ் செல்வி இருவரின் காதல் விவகாரம் தெரிந்து அதே சிறையில் வார்டனாக உள்ள வெற்றிவேலின் அண்ணன் கைலாஷ் மற்றும் அவரது மனைவி மகளிர் சிறை வார்டன் ராஜசுந்தரி ஆகியோர் செந்தமிழ்செல்வியை கண்டித்தனர். இதில் பிப்ரவரி 2ம் தேதி பணியில் இருந்த செந்தமிழ்செல்வியை அழைத்து ஜாதி பெயரை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவனுக்கு அடுத்த வாரம் வேற ஒரு இடத்தில் திருமணம் ஏற்பாடு ஆகிவிட்டது. ஏதாவது பிரச்சனை பண்ணினால் நடப்பதே வேறு என்று மிரட்டியிருக்கிறார். இவர்களின் மிரட்டால் மனவேதனை அடைந்த செந்தமிழ்செல்வி, 

 

அடுத்த நாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தந்தை புகாரை அடுத்து சிறை வார்டன்கள் கைலாஷ், அவரது மனைவி ராஜசுந்தரி, காதலன் வெற்றிவேல் ஆகிய 3 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர். 

 

 police  looking for the undercover prison couple wardons in suicide case!

 

போலீசார் வழக்கு பதிந்தது குறித்து அறிந்த 3 பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் சொந்த ஊர் அருகே நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த காதலன் வெற்றிவேலை தனிப்படை இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பிப்ரவரி 5ம் தேதி கைது செய்து 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அண்ணன் கைலாஷ், இவரது மனைவி ராஜசுந்தரி தலைமறைவாக உள்ளனர். இதற்கிடையில் காதலன் வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து சிறை சூப்பிரண்டு முருகேசன் 7ம் தேதி உத்தரவிட்டார். அண்ணன் கைலாஷ், அண்ணி ராஜசுந்தரி இருவரையும் சமீபத்தில் சிறை சூப்பிரண்டு முருகேசன் சஸ்பெண்ட் உத்தரவிட்டார். ஆனாலும் தனிப்படை போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

 

தற்கொலை செய்து இறந்த தலித் சமூகத்தை சேர்ந்த சிறைவார்டன் செந்தமிழ்செல்வி குடும்பத்திற்கு அரசாங்க தரப்பில் இருந்து கொடுக்க வேண்டிய எந்த நிதி உதவியும் இன்னும் கிடைக்கவில்லை என முதல்வருக்கும், மனு அனுப்பி உள்ளனர். உயர் அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.