Skip to main content

தாயும் மகளும் திடீர் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை..!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Police investigate sudden passes away of mother and daughter ..!

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது பல்லேரிபாளையம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான பாலு. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு, இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஒரு மகன் ஆகியோருடன் மெய்யூர் கிராமத்தில் வசித்து வருகிறார் பாலு. இரண்டாவது மனைவி தனலட்சுமி, பல்லேரி பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறார்.  இவர்களின் மகள் கங்கா (வயது 40). 

 

கங்காவிற்கும்  நாகராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் கங்கா, தனது தாயார் தனலட்சுமியுடன் பல்லேரிபாளையம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி தாயும் மகளும் திடீரென ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் தாய் மகள் இறந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சந்தேக மரணம் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

 

உடல் நலக்குறைவு காரணமாக இருந்தார்களா அல்லது வேறு ஏதேனும் அவர்களின் உயிரிழப்புக்குக் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மகள் இருவரும் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்