சிறுமிபோல் இருக்கும் உயரம் குறைவான மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிடம் "நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
"உன் மேல கையை போட்டுக்கலாமா?" "உங்க அக்கா புருஷன் என்னவெல்லாம் பண்ணுவாரு?" என்று அச்சில் ஏற்றமுடியாத விவகாரமான கேள்விகளை எழுப்பி ஈவ்டீசிங் செய்ததுடன் அந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் பேசும் ஆபாசமான, அந்தரங்கமான பேச்சுகளையும் வீடீயோ எடுத்து குட்டி சொர்ணாக்கா என்கிற பெயரில் 'டப்ஸ்மாஷ்', 'டிக் டோக்' வீடியோக்களில் பரப்பி வருகிறார்கள் அந்த ஊர் இளைஞர்கள். இதற்கு, சினிமா ஆசைகொண்ட தாய் மஞ்சுளாவும் உடந்தையாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, நக்கீரன் இணையதளத்திலும் நக்கீரனிலும் செய்தி வெளியிட்டோம். இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தாய் மஞ்சுளாவிடம் இராமநாதபுரம் மகளிர் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. மேலும், யார் யார் செல்ஃபோனில் வீடியோ எடுத்தார்கள்? என்று விசாரணை செய்யப்பட்டுவருகிறது.