Skip to main content

ஸ்டாலின் பிரச்சாரத்தை தடுக்க நினைத்த போலீஸ்; நள்ளிரவில் அனுமதி வாங்கிய வழக்கறிஞர் குழு

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

தமிழக இடைத்தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக கடந்த முறை நின்று ஜெயித்து, தற்போது கட்சிக்கு நேர் எதிர் வேட்பாளராக நின்று கடந்த முறை வென்ற எண்ணிக்கையை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து காட்டுவேன் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துவருகிறார். 

 

stalin

 

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுகவில் 10 அமைச்சர்கள். அமமுகவில் முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் என கூட்டு சேர்ந்து எப்படியும் செந்தில்பாலாஜியை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று முழு வீச்சில் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்து திமுக ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு முட்டுகட்டை போட நினைத்தாலும் செந்தில்பாலாஜியும் அவர்கள் வழக்கறிஞர் அணியும் அதனை மீறி அனுமதி வாங்கியுள்ளது. இது ஆளும் கட்சியினர் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. என்கிறார்கள் திமுகவினர்.  
 

திமுக தலைவர் ஸ்டாலின் இறுதி நாள் பிரச்சாரத்திற்காக செந்தில்பாலாஜி 12 இடங்களை கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். ஆனால், தேர்தல் கண்காணிப்பாளர்கள் பிரச்சாரத்திற்கு முந்தின நாள் 4 இடங்கள் மட்டுமே அனுமதி கொடுத்தார். எங்களுக்கு எல்லா இடங்களும் வேண்டும் என்று அரவக்குறிச்சி தேர்தல் பார்வையாளர் மீனாட்சி முன்பு காலை 10 மணிக்கு சென்றவர்கள் இரவு 10 மணிவரை அந்த அறையிலேயே இருந்து அனுமதி கொடுக்கும் வரை போக மாட்டோம் என்று உள்ளிருப்பு போராட்டம் போல் நடத்தினார்கள். இதனால் அதிகாரிகள் செல்போனில் மேலிட அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர்களால் அனுமதி கொடுக்காமல் இருப்பதற்கு சரியான காரணத்தை சொல்ல முடியாமல் இருந்தது. 
 

ஒரு கட்டத்தில் கடுப்பான செந்தில்பாலாஜி, “எவ்வளவு நேரம்தான் இங்கையே இருப்பது” என டி.எஸ்.பி.யை காட்டி “இவுங்க கிட்ட இப்படி கேட்டா நியாயம் கிடைக்காது. போய் ரோட்டில் படுத்தா, தானா வழி பிறக்கும்” என்று கடுமையாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வெளியேற முயற்சி செய்தார். செந்தில்பாலாஜியின் இந்த போராட்டத்தை வழக்கறிஞர் குழுவில் உள்ள சீனியர் மணிராஜ் உள்ளிட்டோர் அவரை தடுத்து அமைதிப்படுத்தினார்கள். இதற்கு இடையில் திமுக திண்டுக்கல் சக்கரபாணியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் வழக்கறிஞர் குழுவிடம் சேர்ந்து கொண்டனர். 
 

8 இடங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கிறோம் என்றவர்கள் கடைசியில் நாங்கள் சொல்ற நேரத்திற்கு நீங்க பிரச்சாரம் பண்ணுங்க என்று புதிதாக 12 இடங்களுக்கான நேரத்தை ஒதுக்கி கொடுத்தனர். 
 

திமுகவினர் மாலை பள்ளப்பட்டியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டதை போலீஸ் தரப்பில் நீங்கள் காலையில் பிரச்சாரம் பண்ணுங்கள் என்று தெரிவித்தது. ஆனால் செந்தில்பாலாஜி, “என் தலைவர் பேசுவதற்கு நீங்க யார் அனுமதி கொடுக்கிறது. நீங்கள் கொடுத்த எதையும் நாங்க ஏற்றுக்கொள்ளவில்லை. நான் தலைவரை வரவேற்க செல்கிறேன்” என்று அங்கிருந்து கிளம்பினார். 
 

பிரச்சாரத்தின் இறுதிநாள் தேர்தலை நிறுத்துவதற்கு அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் நேரம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அனுமதியில்லாமல் பிரச்சாரம் செய்தால் சட்ட ஓழுங்கு காரணம் காட்டி பிரச்சனை செய்வார்கள். பிறகு ஸ்டாலின் மீது வழக்கு தொடர வாய்ப்பு இருக்கு என்று வழக்கறிஞர்கள் மணிராஜ் மற்று திமுக சக்கரபாணி ஆகியோர்கள் இரவு முழுவதும் அதிகாரிகளிடம் சட்ட ரீதியாக நாங்கள் முறையாக விண்ணப்பம் செய்தும் நீங்கள் அரசியல்வாதிகளுக்கு துணை போனால் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று நெருக்கடி கொடுக்க வேறு வழியில்லாம் நள்ளிரவு 12.00 மணிக்கு முறையாக அனுமதி வாங்கி ஸ்டாலின் இறுதி நாள் பிரச்சாரத்தை நடத்தினார் செந்தில்பாலாஜி.
 

அரவக்குறிச்சி இறுதி நாள் பிரச்சாரத்தில் பள்ளப்பட்டி, வேலாயுபாளையம், நொய்யல், பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், வேலஞ்செட்டியூர், ஈசநத்தம், வாவிகனம், தடாகோவில், என அனைத்து இடங்களிலும், அந்த அந்த பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், “எடப்பாடி ஆட்சியை நாம் கவிழ்க்க வேண்டியதில்லை தானாவே கவிழ்ந்து விடும். 23ம் தேதிக்கு பிறகு நம்முடைய ஆட்சி” என்று பிரச்சாரம் செய்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.