Skip to main content

வாலிபரை கடத்திய வழக்கில் பெண் இன்ஸ்பெக்டா் சஸ்பென்ட் செய்யப்பட்டாா்.

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

ஒரே நாளில் அல்லது குறுக்கு வழியில் பணக்காரராக ஆகி விடவேண்டும் என்று பலா் ஆசைப்பட்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கடைசியில் சிக்கலில் மாட்டிவிடுகிறாா்கள். அந்த வகையில் தான் பெண் இன்ஸ்பெக்டா், ஆசிாியா், இரண்டு காவலா்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டியிருக்கிறாா்கள்.
 

police inspector arrested


குமாி மாவட்டம் கருங்கல் பாலப்பள்ளத்தை சோ்ந்த ஜொ்லின் (24) ஜேசிபி டிரைவா். இவா் இரண்டு மாதங்களுக்கு முன் இரண்டு சொகுசு காா்கள் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்கள் வாங்கி தொழில் செய்து வந்தாா். இந்தநிலையில் ஜொ்லினுக்கு தீடீரென்று பணம் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் அக்கம் பக்கத்தில் ஏற்பட்டது. இதில் ஜொ்லினுக்கு புதையல் கிடைத்ததாக அவருடைய நண்பா் வெளியே சென்னாா்.

இந்த விசயம் கருங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலா்கள் ஜோண்ஸ் மற்றும் ரூபினுக்கு தொியவர இதனால் ஜொ்லீனை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனா். இவா்களுடன் கருங்கல் இன்ஸ்பெக்டா் பொன் கீதாவும் இணைந்தாா். பின்னா் இன்ஸ்பெக்டா் ஆலோசனையில் அந்த இரு காவலா்களும் சில ரவுடிகளும் சோ்ந்து  ஜொ்லீனை கடத்தி சென்று வள்ளியூாில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து விட்டு புதையல் எங்கே என கேட்டு  சித்ரவதை செய்தததோடு அவனிடமிருந்த இரண்டு சொகுசு காா்கள் மற்றும் 8 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனா்.

பின்னா் அந்த கும்பலிடமிருந்து தப்பிய ஜொ்லின் குளச்சல் உதவி சூப்பிரண்டிடம் புகாா் கூறினாா். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாாித்து வந்தனா். இதில் அந்த பகுதியில் உள்ள வசதியானவா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இந்த இன்ஸ்பெக்டா் மற்றும் ரவுடி குமபல் ஈடுபட்டு வந்தது. அதன்படி தான் ஜொ்லினையும் மிரட்டி புதையலையும் பறித்து விடலாம் என திட்டமிட்டு அதில் மாட்டி கொண்டனா்.


இதில் மூளையாக செயல் பட்டு வந்த கருங்கல் பெண் இன்ஸ்பெக்டா் பொன் கீதா மற்றும் காவலா்கள் ஜோண்ஸ், ரூபின் இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனா். மேலும் இதில் தொடா்புடைய நாகா்கோவில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிாியா் சுரேஷ்குமாா், மற்றும் ஜொின் ராபி, கிருஷ்ணகுமாா் ஆகிய 3 போ் கைது செய்யபட்டுள்ளனா். மேலும் இன்ஸ்பெக்டா் உட்பட தலைமறைவாக உள்ள ரவுடிகளை தனிப்படையினா் தேடிவருகி்றது. இச்சம்பவம் குமாி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.