Skip to main content

திருவண்ணாமலை டூ கேஜிஎப்; கொண்டையை மறந்த கொள்ளைக்காரர்கள் - கூண்டோடு தூக்கிய தமிழ்நாடு போலீஸ்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Police have arrested those involved in the Tiruvannamalai ATM robbery

 

திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் நகரில் 4 ஏ.டி.எம்களை உடைத்து 72.79 லட்ச ரூபாய் கொள்ளையடித்துச் சென்றது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலைகள், பொது இடங்கள் என எல்லா இடத்திலும் சிசிடிவி கேமரா பாதுகாப்பில் உள்ள தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் புகுந்து கொள்ளையடித்துச் சென்றது பலமாநிலங்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த குற்றவாளிகளை எப்படி பிடிக்கப் போகிறார்கள் தமிழ்நாடு போலீசார் என்கிற கேள்வி எழுந்தது.

 

கொள்ளை சம்பவம் டிஜிபி சைலேந்திரபாபு கவனத்துக்குச் சென்றதும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மேற்பார்வையில் 5 எஸ்.பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்ட எஸ்.பி. செபாஸ் கல்யாணம் ஆந்திரா மாநிலத்துக்கும், வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் குஜராத் மாநிலத்துக்கும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் ஹரியானா மாநிலத்துக்கும், திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன் கர்நாடகா மாநிலத்துக்கும் விரைந்தனர். மாநில சைபர் க்ரைம் பிரிவில் பணியாற்றிய ராணிப்பேட்டை எஸ்.பி கிரண்ஸ்ருதி, சிசிடிவி, கைரேகை மற்றும் இதர மாநில போலீஸாருடன் தொடர்பில் இருந்து கண்காணித்து வந்தார்.

 

சந்தேகத்துக்கு உரிய செல்போன் நம்பர்களை பட்டியலெடுத்து அவற்றை ட்ரேஸ் செய்தனர். அதில் ஒரு நம்பர், கர்நாடகா மாநிலம் கோலார் லொக்கேஷனை காட்டியது. திருவண்ணாமலை டூ கோலார்க்கு நேரடி வழிகள் இருக்க, அந்த நம்பர் சித்தூர், நகரி, ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, போளுர், கலசப்பாக்கம் வழியாக திருவண்ணாமலைக்கு வந்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நம்பருக்கு வந்த அனைத்து அழைப்புகளும் போலீசாரால் பின் தொடரப்பட்டது.

 

இதன்மூலமாக, கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப் நகரில் ஒரு லாட்ஜ்ஜில், கொள்ளையர்கள் தங்கியிருந்ததை போலீசார் உறுதி செய்தனர். கேஜிஎப் போலீஸ் சோர்ஸ் மூலமாக உறுதி செய்து கொண்டு நெருங்கிய போது, அந்த குற்றவாளிகள் தப்பிவிட்டனர். லாட்ஜ் உரிமையாளரை தூக்கிவந்து விசாரித்தனர். விசாரணையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இந்திய அளவில் பிரபலமான மேவாட் மண்டலத்தை சேர்ந்த  கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டுள்ளது அம்பலமானது. திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை டீம்க்கு தலைவனாக இருந்தது, சோனரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் மற்றும்  அருகிலுள்ள புன்ஹானா மாவட்டத்தை சேர்ந்த ஆஜாத் எனவும் தகவல் கிடைத்தது.

 

திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான டீம், ஹரியானா மாநிலத்துக்கு சென்றது. அம்மாநில போலிஸாரின் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க முடிவுசெய்தனர். கொள்ளை டீம் தலைவன் விமானம் வழியாக பெங்களுரூவில் இருந்து டெல்லி வந்திருப்பதை உறுதி செய்து அவனை ஃபாலோசெய்து அவன் கிராமத்தில் வைத்தே அவனை தூக்கிவந்துள்ளனர் தமிழ்நாடு போலீசார். கைதான இருவரிடமிருந்து 3 லட்ச ரூபாய் மட்டும் ரெக்கவரி செய்யப்பட்டுள்ளது.

 

கொள்ளையில் ஈடுப்பட்ட மற்றவர்கள், தங்களது சுமோவை கன்டெய்னர் லாரியில் ஏத்திக்கொண்டு சென்றுள்ளனர். அவர்களை குஜராத்தில் வைத்து வேலூர் எஸ்.பி ராஜேஷ்கண்ணா தலைமையிலான டீம் ஃபாலோ செய்து மடக்கியது. மேவாட் ரீஜீன் கொள்ளையர்கள் ஸ்கெட்ச் போடுவதில் படுகில்லாடிகள். பலமாநிலங்களில் இப்படி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்தும், மிஷினையே தூக்கிக்கொண்டும் சென்றுள்ளார்கள். இவர்களது பகுதியில் எந்த மாநில போலிஸாலும் இவர்களை நெருங்கவே முடியாது, இதனால் சில மாநில போலிஸார், ஏ.டி.எம் கொள்ளை வழக்குகளை முடிக்கமுடியாமல் திணறிவருகின்றனர். ஆனால், தமிழ்நாடு போலிஸ் சரியாக ஸ்கெட்ச் போட்டு அவர்களின் இடத்திலிருந்தே சென்று கொள்ளையர்களை கைதுசெய்து விமானம் வழியாக தமிழ்நாட்டுக்கு தூக்கிவந்து சிறையில் அடைத்துள்ளது.

 

தமிழ்நாடு போலீசின் இந்த துரித நடவைக்கையை கண்ட வடமாநில போலீசார் மூக்கில் விரல் வைத்துள்ளனராம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.