Advertisment

வாக்கு பெட்டிகளுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு (படங்கள்) 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்போகும் வாக்கு பெட்டிகள் சென்னை வைஷ்ணவாகல்லூரியில் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அன்று பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடு வேலைகளும் நடைபெறுகிறது.

Advertisment

local body election
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe