அதன்பின் உதயராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது. அதில் உதயராஜ் நம்பரை பயன்படுத்தி காவல்துறையில் ஆன்லைன் புகார் சென்றதால், போலிசார் உதயராஜை விசாரணைக்கு அழைக்கும் போது தான் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உதயராஜ்க்கு வந்த செல்போன் அழைப்பை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் திருநெல்வேலி பணங்குடி இருப்பிடத்தை செல் சிக்னல்கள் வைத்து கண்டுபிடுத்துள்ளனர். அதன்பின்பு போலீசார் நடத்திய விசாரணையில், உதயராஜிடம் தொலைபேசியில் பெண் குரலில் பேசியவர் நெல்லை மாவட்டம் பணகுடியைச் ராஜ்குமார் ரீகன் என்பது தெரியவந்தது.
பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் பறித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜ்குமார் ரீகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், சேத்துப்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது, சபிதா மற்றும் ரூபா என்ற பெண்கள் மூலம் இது போன்று லோகாண்டா செயலியில் பெண்கள் பெயரில் கணக்கு துவங்கி, பெண் போல் பேசி சம்பாதிப்பதை ரீகன் கற்றுக் கொண்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் பல பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, மோசடி வலையில் சிக்கும் ஆண்களிம் ஆபாச உரையாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் பயன்படுத்தி போலிசில் மாட்டிவிடுவேன் என கூறியும், ஆன்லைன் புகார் கடிதத்தை அனுப்பியும் மிரட்டி பணம் பறித்து உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பல ஆண்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் துபாய், மலேசியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள ஆண்கள் இவருடைய பெண் குரலால் ஏமாறியதும் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.