Skip to main content

‘மாட்டிக்கொள்ளாமல் எப்படி  திருடுவது’ - திருடனுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த போலீஸ்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

police gave a plan to the thief on how to steal

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் இணையத்துக்கு உட்பட்ட ஒரு வீட்டில் திருடிய வழக்கில் செந்தில்குமார்(30), கருப்புசாமி (31), பாலசுப்ரமணி (42) ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு திட்டங்களை வகுத்து கொடுத்தது ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் ராஜீவ் காந்தி (35) எனத் தெரிய வந்தது. 

 

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் செந்தில்குமார் ஏற்கனவே பெருந்துறையில் 2021ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீஸ்காரர் ராஜீவ் காந்தி சென்றார். அப்போது செந்தில்குமார் உடன் நட்பை ஏற்படுத்தி சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் தன்னை சந்திக்குமாறும் போலீசில் சிக்காமல் திருட்டு வழிப்பறியில் ஈடுபடத் திட்டம் வகுத்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

 

அதன்படி ஜாமீனில் வெளிய வந்த செந்தில்குமார் கூட்டாளிகளுடன் சென்று போலீஸ்காரர் ராஜீவ் காந்தியை சந்தித்துள்ளார். அப்போது போலீஸ்கார் ராஜீவ்காந்தி பெருந்துறையில் அவருக்கு சொந்தமான மளிகை கடையில் செந்தில்குமார் மற்றும் அவரின் கூட்டாளிகளை வேலைக்கு சேர்த்து விடுவது போல் சேர்த்துவிட்டு திருடுவதற்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். அதன்படி செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சித்தோடு, பெருந்துறை, திருப்பூர் என பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர். இதனை அடுத்து போலீஸ்காரர் ராஜீவ் காந்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

தற்போது ராஜீவ் காந்தி கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கடந்த 2009 முதல் 2020 ஆம் ஆண்டு வரை திருப்பூரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். பணிபுரிந்த காலத்தில் பல குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் இருந்ததால் அவர் அடுத்தடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெருந்துறை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு முதன்மை காவலராக பணிபுரிந்தார். அதன் பின்னர் அவர் ஈரோடு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். திருப்பூரில் அவிநாசி சப்-டிவிஷனில் பெருமாநல்லூர், குன்னத்தூர், அவிநாசி ஈரோட்டில் சித்தோடு, பெருந்துறை என 7 திருட்டு வழக்கில் ராஜீவ்காந்திக்கு தொடர்பு  இருப்பது தெரிய வந்தது.  தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியை  காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது