Skip to main content

விவசாய சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு...

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

police  filed case against 50 people

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகில் உள்ளது ஊத்தோடைக்காடு. இப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்து அறநிலைத்துறை கோவிலுக்குக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். சமீபத்தில் அந்த நிலத்தை வேறு ஒரு நபர் குத்தகைக்கு ஏலம் எடுத்ததாக தெரியவருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஏற்கனவே விவசாயம் செய்துவரும் விஜயகுமாருக்கும் சமீபத்தில் குத்தகை எடுத்தவருக்கும் நிலத்தை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

 

இதனால் விஜயகுமார், பயிர் செய்திருந்த மரவள்ளி செடிகளை சமீபத்தில் குத்தகைக்கு எடுத்த நபர் அழித்துள்ளதாக கூறி விஜயகுமார் கச்சராபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றுகூறி விஜயகுமாருக்கு ஆதரவாக கிஸான் விவசாய சங்கத்தை சேர்ந்த சுமார் 50 பேர் நேற்று காலை கச்சராபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

 

அவர்களிடம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முறையான விசாரணை நடத்தப்படும் என்று கூறி விவசாயிகளை கலைந்து செல்ல வைத்தனர். மேலும் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இப்படி கூட்டமாக கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தது சட்டப்படி தவறு என்று கூறி முற்றுகையிட்ட கிஸான் விவசாய சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.