Skip to main content

மாமூல் பிரிப்பதில் தகராறு: ஆபாசமாக பேசி சண்டையிடும் போலீசார்! வைரலாகும் வீடியோ!!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
police

 

 

மதுரையில் வைகை ஆற்று மணலை திருடும் கும்பலிடம் பேரம் பேசி, ஆபாசமான வார்த்தைகளை சொல்லி சண்டையிட்டு கொள்ளும் காவல்துறையினரின் வீடியோ காட்சிகள் சமூகவளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மதுரை மாவட்டம், வைகை ஆற்றுப் பகுதியில் ஒரு கும்பல் மாட்டு வண்டிகள் மூலமாக மணலை திருடி விற்பனை செய்து வந்துள்ளது. இதனை அறிந்த மதுரை அண்ணாநகர் காவல் நிலைய காவலர் ராம்குமார் மணல் திருட்டு கும்பலிடம் அவ்வப்போது லஞ்சம் வாங்கிக் கொண்டு மணல் திருட்டை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இதனை அறிந்த மதிச்சியம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரன், மணல் திருடி கொண்டிருந்த கும்பலிடம் சென்று, ஒரு மாட்டு வண்டிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் தனக்கும் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் காவலர் ராம்குமாருக்கு ஏற்கனவே பணம் தந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இது காவலர் ராம்குமாருக்கு தெரியவே, சம்பவ இடத்திற்கு வந்த காவலர் ராம்குமாரும், சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரனும் பணம் பெறுவது தொடர்பாக ஆபாசமாக பேசி சண்டையிட்டு கொண்டனர். அப்போது,

காவலர் ராம்குமார்: எல்லா வற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது. பொறுத்து போவதற்கும் ஒரு அளவு உண்டு.

ஆய்வாளர் பிரேம் சந்திரன்: எப்போது பார்த்தாலும் ராம்குமார் மணல் எடுக்கிறார் என்கின்றனர்.

ராம்குமார்: இஞ்சினியர்கள் தான் மணல் எடுத்தார்கள். நான் மணலை எடுத்துச் சென்றேனா? நான் மணலை எடுத்து வீடு கட்டுகிறேனா? நீங்க 2 வண்டி புடிச்சிங்க..

பிரேம் சந்திரன்: உங்க அப்பா கூட வேலை பார்த்தவன் நான்.

ராம்குமார்; எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குன்னே.. என்னிடம் நீங்கள் ரூ.5000 பணம் கேட்டீர்கள். அதற்கான ஆதாரம் உள்ளது. சும்மா தினமும் வந்து 1000 தா, 2000 தா என பணம் கேட்கிறீர்கள், போலீஸ்காரனிடமே பணம் கேட்டு தொந்தரவு செய்றீங்க.

பிரேம் சந்திரன்: விஏஓ பேசியதையே நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.

ராம்குமார்: விஏஓவும் பணம் வாங்கி இருக்கிறார், விஏஓக்கு பணம் கொடுத்துருக்காங்க.

பிரேம் சந்திரன்: நீங்களே பணம் வாங்கி கொண்டிருந்தால் நான் என்ன செய்வது?

ராம்குமார்: பார்த்து மரியாதையாக பேசுங்கள்..

இதன் பின் இருவரும் தொடர்ந்து மாறி மாறி ஆபாச வார்த்தைகளால் திட்டி கொள்கின்றனர்.
 

 

police

 

 

 

இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் வழியே காவலர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ பரவி வைரலாவதை அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரன், காவலர் ராம்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வீடியோ குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.