Skip to main content

முன்னாள் எம்.எல்.ஏவை கைது செய்ய பயந்த போலிஸ்... ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்க்காக திமுக, அதிமுக, அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் தேர்தல் வேலை பார்த்தனர். திமுக வேட்பாளர் வீட்டில் ரெய்டு செய்ததை போல அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வீட்டில், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ரெய்டு நடத்தவில்லை, இந்த தொகுதியில் மட்டும்மல்ல தமிழகத்திலேயே அதிக செலவு செய்யும் வேட்பாளராக அவர் தான் உள்ளார் என்பது குற்றச்சாட்டாக இருந்தது.

 

 police fear to arrest Former MLA... The court granted bail

 

இந்நிலையில், ஏப்ரல் 15ந்தேதி ஒரு வீடியோ சமூக வளைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான அதிமுகவை சேர்ந்த சம்பத்குமார், ஒரு மரத்தின் கீழ் தனது கட்சி நிர்வாகிகள், பாமகவினரை அழைத்து, ஏ.சி.சண்முகம் சார்பாக ஓட்டுக்கு நாம் பணம் தரவேண்டும், அதற்கு ஒரு டீம் ரெடியாக இருக்க வேண்டும். பணம் தரும் குழுவோடு ஏ.சி.சண்முகம் ஆள் ஒருவர் வருவார். அவரை வைத்துக்கொண்டு தான் தரவேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்துக்கொண்டுயிருந்தார். இது பெரும் சர்ச்சையானது.

 

 police fear to arrest Former MLA... The court granted bail

 

மேற்கண்ட வீடியோ வெளியான நிலையில் ஏப்ரல் 16ந்தேதி வேலூர் பாராளுமன்ற தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த வீடியோ பதிவு மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என்கிற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்து வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரை நோக்கி எழுப்பப்பட்டது. அதனால் அவர் உத்தரவுப்படி வாணியம்பாடி உதவி தேர்தல் அலுவலர் சார்பில், வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.

 

 

அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கைது செய்யாமல் ஆளும்கட்சி முன்னாள்  எம்.எல்.ஏ என்பதால் பயந்து பதுங்கியது காவல்துறை. எப்.ஐ.ஆர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த வழக்கில் இன்று ஏப்ரல் 24ந்தேதி வாணியம்பாடி உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜரானார் சம்பத்குமார். மாலை வரச்சொன்னார் நீதிபதி. அதன்படி இன்று மாலை அந்த வழக்கில் சம்பத்குமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.