Skip to main content

கள்ள மது விற்பனையைத் தடுக்க தவறிய போலீசார்... நோட்டிஸ் அனுப்பிய எஸ்.பி!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

Police fail to stop sale of counterfeit liquor ... SP sent notice

 

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூடிய தமிழ அரசு பிறகு டாஸ்மாக் கடைகளுக்கு தளர்வு கொடுத்தது. அதேபோல கரோனா தொற்று உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முதலில் மூடப்பட்டாலும் இப்போது அதுவும் இல்லை.

ஆனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்க நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வர்த்தக அமைப்புகளே முடிவெடுத்து ஒரு வாரம் 10 நாட்கள் எனக் கடைகளை மூடி பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால் இந்தக் கட்டுப்பாடு டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் இல்லை.

 

Police fail to stop sale of counterfeit liquor ... SP sent notice


இந்த நிலையில் தான் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுஅடைப்பு என  தமிழக அரசு அறிவித்தது. இந்த நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடை மூடினாலும் முதல்நாளே விற்பனை அதிகரித்திருந்தது. அதாவது கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்களே பெட்டி பெட்டியாக அள்ளிச் சென்று முழு ஊரடங்கு நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.

புதிதாகப் பொறுப்பேற்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாவட்டம் முழுவதும் பல சிறப்புப்படை போலீசாரை ரகசியமாக அனுப்பி கள்ள மது விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து பல நூறு மதுப்பாட்டில்களையும் பணத்தையும் பறிமுதல் செய்தார்.

 

Police fail to stop sale of counterfeit liquor ... SP sent notice


இந்தநிலையில் இன்று மாவட்டத்தில் உள்ள 35 காவல்நிலைய அதிகாரிகளுக்கும் ஒரு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் தங்கள் பகுதியில் ஊரடங்கு நாளில் மது விற்ற நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் காவல் சரகத்தில் மது, கஞ்சா, மணல், சீட்டாட்டம் போன்ற குற்றச்செயல்களை தடுக்க அறிவுறுத்தியும் தடுக்க தவறிவிட்டீர்கள். அதனால் உங்கள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது. இதற்கான விளக்கத்தை 3 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக அனுப்ப வேண்டும் தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் புது எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையாக இந்த நோட்டிஸ் சென்றுள்ளதால் காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் மாவட்ட மக்களோ எஸ்.பி.யின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.